கொழும்பு – ஹோமாகமவில் பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய வகுப்பாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பனாகொட, மெத மண்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியில் தாய் ஹோமாகம தலைமையக பொலிஸ் நிலையத்தில் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.