28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பை நோக்கிய போராட்டம் பேருவளையில் ஆரம்பம்

‘மக்களை துன்பத்துக்குள் தள்ளிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியானது, இன்று காலை 9.00 மணியளவில் களுத்துறை பேருவளை நகரில் ஆரம்பமாகியது.

பேருவளையில் ஆரம்பமான இந்த பேரணி வாதுவ வரை செல்லவுள்ளது.

இதனையடுத்து நாளை காலை 9.00 மணிக்கு வாதுவையிலிருந்து மீண்டும் ஆரம்பமாகும் பேரணி மொரட்டுவை வரை செல்லவுள்ளது.

மொரட்வை பிரதேசத்திலிருந்து நாளை மறுதினம் காலை 9.00 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகவுள்ள பேரணி கொழும்பு நகர மண்டபப் பகுதியை வந்தடையவுள்ளது.

மக்களின் பணம் சூறையாடப்பட்டுள்ளது, சமைப்பதற்கு எரிவாயு இல்லை, வீட்டில் மின்சாரம் இல்லை போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பாரியளவிலான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாததைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles