சங்கிற்கு வாக்களிக்க வேண்டும் மீனவர் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கோரிக்கை!

0
80

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் நாட்டில் அக்கறையுள்ள சிங்கள மக்களும் சங்கு சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும் எனவும் வடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். நகரில் உள்ள தமிழ் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.