சர்ச்சையில் சிக்கிக்கொண்ட எலான் மஸ்க்!

0
140

கடந்த 2016 ஆம் ஆண்டு நியூராலிங்க் நிறுவனத்தை ஆரம்பித்த எலான் மஸ்க் அங்குள்ள பணியாளர்கள் ஊடாக மூளையில் பொருத்தும் சிப்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சிப்களை பக்கவாதம் வந்தவர்களுக்கு மூளையில் பொருத்துவதன் மூலம் அவர்களால் நடக்கவும்இ அவர்களின் நரம்பியல் பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுவதோடுஇ பார்வையற்றவர்கள் பார்க்கவும் இவை உதவும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்இ இந்த சிப்களின் சோதனையில் பல விலங்குகள் ஈடுபடுத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக நியூராலிங்க் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது எலான் மஸ்க் சோதனையை முடிக்கும்படி பணியாளர்களுக்குக் கொடுத்த அழுத்தத்தால்இ விலங்குகள் மீது வேகமாகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 2018ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில்இ ஆடுகள், பன்றிகள்இ எலிகள், குரங்குகள் என சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். எனினும் எத்தனை விலங்குகள் மீது சோதனை நடத்தப்பட்டது என்பதற்குஇ இந்நிறுவனம் தெளிவான ஆதாரத்தை வைத்திருக்கவில்லை. அதனால் அதிகப்படியான விலங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுஇ அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து எலான் மஸ்க் மற்றும் நியூராலிங்க் நிறுவனத்தில் இருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.