சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாசலையில் விழிப்புணர்வு!

0
179

சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் இடையே, யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு, இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசலையில், எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல் கழகத்தின் ஏற்பாட்டில், நிகழ்வு நடத்தப்பட்டது.
எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல் கழக தலைவர் ம.சசிகரன், யானைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை, மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
அத்துடன், யானை உருவங்களை அணிந்து, பாடசாலை மாணவ மாணவிகள், விழிப்பூட்டும் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வில், பாடசாலை அதிபர் கு.திலீபன், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
யானைகளைப் பாதுகாக்கவும், சட்டவிரோதமான முறையில் யானைகளை வேட்டையாடுதலை தடுக்கவும், சர்வதேச யானைகள் தினம், ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி, உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.