சற்று முன் 35வது கொரோனா மரணம்

0
839

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்தார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


78 வயது வயோதிபர் ஒருவரே சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

இவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு, இவரது மரணத்துக்கு காரணம் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்தது.