26 C
Colombo
Thursday, March 23, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘இராவண கோட்டம்’ முதல் பாடல் வெளியீடு

நடிகர் சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ படத்தில் இடம்பெற்ற ‘அத்தன பேர் மத்தியிலே..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்கள். இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

‘மதயானைக் கூட்டம்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘இராவண கோட்டம்’.

இதில் சாந்தனு பாக்யராஜ்  கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஆனந்தி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்து வெளியிடுகிறார்.

இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘அத்தன பேர் மத்தியிலே..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத பின்னணி பாடகர் யாசின் நிசார் மற்றும் பாடகி வந்தனா சீனிவாசன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கிராமத்து பின்னணியிலான யதார்த்தமான காதலை மெல்லிசையாக வழங்கி இருக்கும் இந்தப் பாடல் இளைய தலைமுறை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Related Articles

உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வகையில் உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, தண்டப்பணம் விதிப்பு

மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார்...

யாழ்ப்பாணத்தில் பழப்புளியை சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டம்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர்...

யாழ்ப்பாணம் – அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு

யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வகையில் உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, தண்டப்பணம் விதிப்பு

மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார்...

யாழ்ப்பாணத்தில் பழப்புளியை சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டம்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர்...

யாழ்ப்பாணம் – அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு

யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம...

ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ். வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளருக்கு, கொலை மிரட்டல்

ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவத்திற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்சியாக,...

நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் காற்றுடன் கூடிய மழை காரணமாக, 61 பேர் பாதிப்பு

நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில், இன்று மாலை ஏற்பட்ட, காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டியன்சின் தோட்டத்தில், 15 ஆம்...