யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆசிரியர்களுக்கும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணிகளுக்கும், வட மாகாணத்தைச் சேர்ந்த தவில் – நாதஸ்வர கலைஞர்களுக்கும் கியூ.ஆர்.கோட் அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.
சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா அறிவித்துள்ளார்.
இதன்போது வாகன பின்னிலக்கங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஜே-288 முதல் ஜே-320 வரையுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கும், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.
நாளை தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஜே-321 தொடக்கம் ஜே-347 வரையுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கும், வட மாகாணத்திலுள்ள தவில்-நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.
காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது.
எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவரும் அனைவரும் தாங்கள் வசிக்கும் கிராம அலுவலர் பிரிவை உறுதிப்படுத்தும் முகமாக குடும்ப அட்டை அல்லது வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஒர் ஆவணத்தையும், தொழிலை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவிடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர், பொதுமக்களின் நேர விரயம், சிரமம், அலைச்சல் ஆகியவற்றைத் தவிர்க்கும் முகமாகவே இவ்வாறான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முயற்சிக்கு பொது மக்களுடைய பூரண ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
Home முக்கிய செய்திகள் சாவகச்சேரி – நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெற்றோல் விநியோகிக்கும் முறை தொடர்பான அறிவிப்பு!