31 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சிப்பாய் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

திருகோணமலை – சீனக்குடா விமானப் படை முகாமில் கடமையாற்றி வந்த சிப்பாய் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று (03) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் குருநாகல்- கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பிரியதர்ஷன எனவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles