31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சீரற்ற காலநிலை: 6,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் ஒன்பது மாவட்டங்களில் 6,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த இரண்டு நாட்களில் 1,630 குடும்பங்களைச் சேர்ந்த 6,049 நபர்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 1,199 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகவுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 122 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles