சுகாதார உத்தியோகத்தர்களை அமைச்சர் ஜீவன் சந்திப்பு!

0
101

நுவரெலியா, கொட்டகலையில் தோட்ட வைத்திய அதிகாரிகள், தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள், மற்றும் சிறுவர் பாராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்களை நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

கொட்டகலை சீ.எல்.எப் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 600 ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறினர்.

இதனிடையே இந்நிகழ்வில் கலந்து கொண்ட கர்ப்;பிணித் தாய்மார்களுக்கான சுகாதார பொருட்களையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வழங்கி வைத்தார்.
இந்த சந்திப்பின் போது நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா தேசிய அமைப்பாளர் சக்திவேல், பிரதி தலைவர் கணபதி கணகராஜ், அமைச்சரின் ஒருங்கினைப்பு செயலாளர் அர்ஜூன், ஹட்டன் பிராந்திய மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் ரனசிங்க மற்றும் பலர் கலந்துக்கொண்டர்.