28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 96 பேர் கைது

சமூக இடைவெளி பேணல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறியமை தொடர்பில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறுவுறுத்தலுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டதாக இதுவரையில் 2,532 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 382 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊரடங்குச் சட்டதை மீறியமை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை காலை ஆறு மணி தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிவரையில் மாத்திரம் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அவர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles