சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
17

இந்த வருடத்தின் நாட்டுக்கு பிரவேசித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடந்த 26 ஆம் திகதி வரையில் 2 இலட்சத்து 12,838 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அதில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகைத் தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 37,383 ஆகும். 

அத்துடன், ரஷ்யாவிலிருந்து 29,266 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து, 18,036 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.