30 C
Colombo
Sunday, September 24, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

சுற்றுலா விடுதியின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய எகிப்து பிரஜை தற்கொலைக்கு முயற்சி – வெலிகம பகுதியில் சம்பவம்

வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்பல்கம, குருந்துவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த எகிப்திய சுற்றுலாப் பயணி  ஒருவர் சுற்றுலா விடுதியின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி, குறித்த அறைக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதான எகிப்திய சுற்றுலாப் பயணி மூன்று வருடங்களாக இந்த சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும் சுமார் ஒரு மாத காலமாக விடுதிக்கு செலுத்தவேண்டிய பணத்தை அவர் செலுத்தத் தவறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சுற்றுலா பயணியிடம், விடுதிக்கான கட்டணத்தை செலுத்துமாறு உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ள சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கோபமடைந்த சுற்றுலா பயணி ஹோட்டல் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். பின்னர் தான் தங்கியிருந்த அறைக்குள் எரிவாயு சிலிண்டரை வீசிவிட்டு, தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் காயமடைந்த சுற்றுலா பயணியை மீட்ட பொலிஸார் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தீப் பரவல் காரணமாக விடுதியின் அறைகளுக்கும், சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலாப்பயணி கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது.  இந்த பகுதி அருகே 3 பேர் சந்தேகத்திற்கிடமாக நுழைந்துள்ளனர்.

சிறுமி துஸ்பிரயோகம்; இளைஞன் கைது

மஸ்கெலியா  - சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 18 வயதுடைய இளைஞன், 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் 5 மைதானங்களில் இளையோர் உலகக் கிண்ணம்

எதிர்வரும் ஜனவரி 13 தொடக்கம் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஐந்து மைதானங்களின் விபரம் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது.  இந்த பகுதி அருகே 3 பேர் சந்தேகத்திற்கிடமாக நுழைந்துள்ளனர்.

சிறுமி துஸ்பிரயோகம்; இளைஞன் கைது

மஸ்கெலியா  - சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் 18 வயதுடைய இளைஞன், 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் 5 மைதானங்களில் இளையோர் உலகக் கிண்ணம்

எதிர்வரும் ஜனவரி 13 தொடக்கம் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஐந்து மைதானங்களின் விபரம் வெளியாகியுள்ளது.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை அணி 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்த...

எபிரஸ் பேர்க்ஸ்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவு திறைசேரிக்கு வழங்கிவைப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பற்றியதால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவாக 8,90,000 அமெரிக்க டொலர் திரைசேறிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.