நாட்டில் சூழ்நிலைக்கேற்ற தலைவர் ரணில் விக்ரமசிங்க என, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மகளிர் தின நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமாகிய நா.மதிவண்ணன் தலைமையில்
நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மகளிர் தின நிகழ்வுகள்
நடைபெற்றன.
பிரதம அதிதியாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்துள்ளார்.
விசேட அதிதியாக மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வீ.தங்கவேல், சிறப்பு அதிதியாக கிழக்கு
மாகாண கூட்டுறவு பயிற்சி பிரிவு பொறுப்பாளர் க.வேல்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.