30 C
Colombo
Wednesday, March 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

இன்று முஸ்லிம்கள் இஸ்லாத்தின் இறுதி இறைதூதரான நபிகள் பெருமானாரின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து சகோதரத்துவத்துடன் முஹம்மத் நபியவர்களின் மீலாத் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

முஹம்மத் நபியவர்கள் மனித குலத்திற்காக செய்த அர்ப்பணிப்புகளை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வது சிறந்ததோர் அபிவிருத்தியடைந்த சமூகத்திற்கான அத்திவாரமாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும். அடுத்த மனிதர்களுடனான எமது உறவு நபிகளார் போதித்த ஒழுக்கப் பெறுமானங்களை மதித்து குரோதங்கள் மற்றும் சந்தேகங்களை ஒழிக்கும் வகையிலேயே அமைய வேண்டும்.

முன்னெப்போதுமில்லாத வகையில் பல்வேறு பிரச்சனைகளை தோற்றுவித்து உலகெங்கிலும் பரவிவரும் கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் முழு மனித சமூகமும் பாரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ளது. இத்தகையதொரு கால சூழ்நிலையில் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு முதலிடமளித்து வாழ்வது எமக்கு உள அமைதியை பெற்;றுத்தரும். அதேபோன்று பரஸ்பர நலன்பேணல், சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் மற்றும் பொது நலனை அடைந்துகொள்வதற்காக நபிகளாரின் வாழ்வியலில் இருந்து பெற்றுக்கொண்ட நன்நெறிகளை நாம் சமூகமயப்படுத்த வேண்டியுள்ளது.

நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாடும் இச்சந்தரப்பத்தில் அவர்கள் காட்டித் தந்த பெறுமானங்களுக்கு ஏற்ப வாழ்ந்து அனைத்து வகையான தீவிரவாதங்களையும் தோற்கடித்து சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான திடவுறுதியுடன் இஸ்லாமியர்கள் ஒன்றுபடுவார்கள் என நான் நம்புகின்றேன்.

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியான மீலாதுந் நபி தினத்திற்கு எனது பிரார்த்தனைகள்.

Related Articles

ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ.200 இனால் குறைவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலைக்கான பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படியும் நடக்கிறது…!

கடந்த சில நாட்களாக தெற்கிலிருந்து தொடர்புகொள்கின்ற ஊடகவியலாளர்கள் பலரும் விசாரிக்கின்ற செய்தி, போதகர் போல் தினகரன் மீது குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றியதுதான்.அவரின் வருகை...

மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் கைது

மட்டக்களப்பு நகரில் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த மூதூரைச் சேர்ந்த ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து கடவுச்சீட்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ.200 இனால் குறைவு

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் ரூபாவின் பெறுமதி உயர்வினால் ஒரு கிலோ தேயிலைக்கான பெறுமதி 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படியும் நடக்கிறது…!

கடந்த சில நாட்களாக தெற்கிலிருந்து தொடர்புகொள்கின்ற ஊடகவியலாளர்கள் பலரும் விசாரிக்கின்ற செய்தி, போதகர் போல் தினகரன் மீது குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றியதுதான்.அவரின் வருகை...

மட்டக்களப்பில் போலி வெளிநாட்டு முகவர் ஒருவர் கைது

மட்டக்களப்பு நகரில் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை நடாத்தி வந்த மூதூரைச் சேர்ந்த ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து கடவுச்சீட்டு ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக ...

எரிபொருள் விநியோகம் வழமைபோன்று இடம்பெறுகின்றது

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள்...

அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தலின், 11ஆம் நாள் இன்று

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தலின், 11ஆம் நாள் இன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், முன்னணியின் யாழ்ப்பாண...