ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று சந்திப்பு

0
161

ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்துக்கு உட்பட்டு நிறைவேற்றக்கூடிய விடயங்களை ஜனவரி 31இற்குள் நிறைவேற்றி நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவேண்டும் எனவும் அதைத் தொடர்ந்து, அடுத்த கட்டப் பேச்சுகள் தொடர்பில் முடிவெடுப்பதென தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி, மாகாணங்களுக்கு முழு அதிகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழ் மக்களின் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி போன்ற விடயங்களை ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான இன்றைய சந்திப்பில் வலியுறுத்தவுள்ளன. அத்துடன், உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பான பட்டியலை இன்றைய சந்திப்பில் ஜனாதிபதியிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.