ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேர்தலை வெற்றி கொள்ள முடியாது ஆயின் அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார். அதுவும் உரிய வகையில் ஆராயந்து தமிழ் சிங்கள மக்களின் வாக்குகள் எத்தகை அவற்றில் எத்தனை வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்பது பற்றியெல்லாம் ஆராய்வார்.
அது மாத்திரமல்லாது மொட்டுக்கட்சியின் ஊடாக எத்தனை வாக்குகளை ஜனாதிபதியால் பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பிலும் ஆராய்ந்து நிச்சயம் வெற்றிபெறுவேன் என ஆராய்ந்தமையை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவார்.