ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷகெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டார்.
ஜப்பானில் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் பிரதமர் ஃபியூமோ கிஷிடாவுக்கு பிறகு இஷிபா தேர்வு செய்யப்பட்டார்.
ஆளுங்கட்சியின் 368 உறுப்பினர்களும் கட்சியின் அடித்தள உறுப்பினர்களும் ஷிகெரு இஷிபாவை தேர்வு செய்தனர். மோசடி குற்றச்சாட்டால் ஃபியூமோ கிஷிடா தனது பதவியை இராஜினாமா செய்ததால் தேர்தல் நடைபெற்றது.