பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிக்கிரியைகளில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
இதற்காக ஜனாதிபதி எதிர்வரும் 17 அல்லது 18 ஆம் திகதி பிரித்தானியாவுக்கு பயணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை மகாராணியாரின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு, இலங்கை அரசாங்கம் அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.