இந்தியாவின் பொலிவூட் நட்சத்திரங்களான ரன்வீர் கபூர் – ஆலியா பட் இருவரும் நேற்று வியாழக்கிழமை திருமணபந்தத்தில் இணைந்தனர். இந்தத் திருமணம் இந்திய திரையுலகின் மிகப்பெரிய திருமணங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இவர்களின் திருமண கொண்டாட்டத்தில் இந்திய திரையுலகின் நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர். திருமண பந்தத்தில் இணைந்த பிறகு இந்த இணை செய்தியாளர் சந்திப்பிலும் பங்கேற்றது. அத்துடன், தமது திருமண படங்களை சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளது.