நமீபியா உயர்ஸ்தானிகாரியால பாதுகாப்பு ஆலோசகரும் கடற்படைத் தளபதியும் சந்திப்பு!

0
5

இந்தியாவின் புது டெல்லியில் உள்ள நமீபியா குடியரசின் உயர்ஸ்தானிகாரியாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும் இலங்கையில் பாதுகாப்பு ஆலோசகராகவும் செயற்படும் கெப்டன் LISIAS KONDJENI
KANGANDJELA கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை நேற்று (05) சந்தித்தார்.
கடற்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது .

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில்இ நமீபியா உயர்ஸ்தானிகாரியாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் 26 ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதன்பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதனை நினைவு கூறும் வகையில் இருவர்களுக்கிடையில் நினைவுப் பரிசுகள் பறிமாற்றிக் கொள்ளப்பட்டன.