28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டின் முக்கிய நகரங்களின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் முக்கிய 7 நகரங்களின் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளது.

எனவே, சிறுவர்கள் – முதியவர்கள், சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார்.

காற்று மாசுபாட்டின் ஏ.கியூ.ஐ புள்ளியானது யாழ்ப்பாணம் -120, கொழும்பு -142, குருநாகல்- 117, கண்டி -103, கேகாலை -106, புத்தளம் -129, பதுளை -109 என பதிவானதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்தும் குறைந்தும் வருவதாக சுவிற்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் காற்றின் தரம் குறித்த தரவுசுட்டியை வெளியிடும் இணையத்தளமும் தரவுகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles