நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை!

0
11
Transparent umbrella under heavy rain against water drops splash background. Rainy weather concept.

நாட்டில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்தத் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.