நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி!

0
132

நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 2023 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை வெளிநாடு செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்திய நிறுவனமான கிரிஷ் குழுமம் றக்பி விளையாட்டினை மேம்படுத்தும் முகமாக போட்டித் தொடர் ஒன்றினை நடாத்த கடந்த 2013 ஆம் ஆண்டு வழங்கியதாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா நிதியினை தவறாக தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தினார் என தொடரப்பட்டுள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், நேற்று இவ்வழக்கு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றே அவருக்கு வெளிநாடு செல்ல நீதிவான் திலின கமகே அனுமதியளித்துள்ளார்.