புத்தளம் தங்கொட்டுவ கொபெய்கனே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெதுருஓயாவில் நீராடுவதற்காக சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்தடுவன பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பொலிஸார், கடற்படையின் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.