தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில், நாட்டின் முதன்மை பணவீக்கம் 2025 மே மாதத்தில் 0.6% ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, 2025 ஏப்ரல் மாதத்தில் – 0.8% ஆக பதிவாகி இருந்தது.
உணவுப் பிரிவில் முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆக இருந்த நிலையில், மே மாதத்தில் 5.9% ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை, உணவு அல்லாத பிரிவில் முதன்மை பணவீக்கம் ஏப்ரலில் -3.7% ஆக இருந்தது மே மாதத்தில் -3.4% ஆக சற்று அதிகரித்துள்ளது.