27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பயிர்செய்கை நிலங்களை விடுவிக்க நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற விளை நிலங்களை விடுவித்து விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் நேற்று (19) வனப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்த காலத்தில் விவசாய நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தமையினால் காடுகளாக மாறியிருக்கின்ற ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர் செய்கை நிலங்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் கையகப்படுததப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

யுத்த காலத்திற்கு முன்னர் பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் அரச காணிகள் மக்களுக்கு பகிர்தளிக்கப்பட்டு அவர்களினால் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், காணி உரித்தை உறுதிப்படுத்தக் கூடிய அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் புதிய வரையறைகள் காரணமாகவும் பெருமளவான பயிர் செய்கை நிலங்களை பிரதேச விவசாயிகள் இழந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம், ஆனைவிழுந்தான், மலையாள புரம் போன்ற பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பூர்வீக விவசாய நிலங்கள் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ளமையினால், அவை விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கடற்றொழில் அமைச்சர் குறித்த சந்திப்பின் போது முன்வைத்தார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் சுய பொருளாதாரத்தை இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்ற நிலையில், நீர்வேளாண்மையை விருத்தி செய்வதற்கு கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால், வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காணிகளில் பொருத்தானவற்றை நீர்வேளாண்மை செயற்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சி.பி.ரத்னாயக்கா, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி சாதகமான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்றுவழங்கினார்.பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் கையளிப்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் கல்லூரியின் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ் இன்று கையளிக்கப்பட்டது.150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் கல்லூரியின்...