31 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பரீட்சைப் பெறுபெறுகள் உரிய நேரத்துக்கு வெளிவருவதை உறுதிப்படுத்த இறுக்கமான நடைமுறைகள் அறிமுகம் !

பரீட்சைப் பெறுபெறுகள் உரிய நேரத்துக்கு வெளிவருவதை உறுதிப்படுத்த இறுக்கமான நடைமுறைகள் அறிமுகம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் உரிய காலப்பகுதிக்குள் வெளிவருவதை உறுதிப்படுத்தும் வகையிலான புதிய நடைமுறை ஒன்றை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அறிமுகப்படுத்தியுள்ளார்.

பரீட்சைப் பெறுபேறுகள் உரிய காலப்பகுதிக்குள் வெளிவராத்தனால் பட்டமளிப்பு விழா காலதாமதடைதல் மற்றும் மாணவர்கள் தொழில்வாய்ப்புக்களை பெறமுடியாமல் சிரமங்களை எதிர்நோக்குதல் பற்றிக் கடந்த 1ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கை மூலம் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, அவர் இந்தப் புதிய இறுக்கமான நடைமுறையை பேரவைக் கூட்டத்தில் வைத்துப் பீடாதிபதிகளுக்கு அறிவித்தார். 

இதன்படி, 

ஒவ்வொரு பாடங்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் நேரத்திலேயே, வினாத்தாள்களை மதிப்பீடு செய்தல், இரண்டாம் மதிப்பீடு, துறைத்தலைவரின் அனுமதி, பீடாதிபதியின் அனுமதி, பரீட்சைக் கிளையிடம் பெறுபேறுகள் ஒப்படைக்கப்படுதல் ஆகியவற்றுக்கான திகதிகளையும் முற்கொண்டே நிர்ணயிக்குமாறு துணைவேந்தர் அறிவுறுத்தியுள்ளார். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி இரண்டு மாத காலப்பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாவதை உறுதிப்படுத்தும் வகையில் இவை அனைத்தும் இரண்டு மாத காலப்பகுதிக்குள் நடைபெறுவதைப் பீடாதிபதிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் பணித்துள்ளார். 

உரிய காலப்பகுதிக்குள் மதிப்பீடு செய்து முடிக்கப்படாத விடைத்தாள்களை அந்தந்த விரிவுரையாளரிடமிருந்து மீளப் பெற்று, பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயோ, அல்லது வேறு பல்கலைக்கழகங்களின் துறைசார்ந்த பொருத்தமான விரிவுரையாளர்கள் மூலமாகவோ மதிப்பிட்டு உரிய காலத்துக்குள் நிறைவுசெய்ய ஏற்பாடு செய்யுமாறும் துணைவேந்தர் பணித்துள்ளார்.  

உரிய காலப்பகுதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை நிறைவுசெய்யாத விரிவுரையாளர்களுக்கு மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகளை இரத்துச் செய்வதுடன், தண்டப்பணம் அறவிடும் பொறிமுறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பீடாதிபதிகளுக்குக் கண்டிப்பாக அறிவுறுத்தியிருக்கிறார். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காலாதிகாலமாக பரீட்சைப் பெறுபேறுகள் உரிய காலப்பகுதிக்குள் வெளிவராமை குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக பல தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் இந்தப் புதிய நடைமுறை மூலம் எதிர்காலத்தில் குறைபாடு நிவர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Related Articles

கொழும்பில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

கொழும்பு - ஹோமாகமவில் பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய வகுப்பாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் பனாகொட,...

U20 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை நடத்தும் உரிமையை இந்தோனேஷியா இழந்தது

20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை இந்தோனேஷியாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும் இப்போட்டிகளில் பங்குபற்றுவது இந்தோனேஷியாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மே 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

திறைசேரி செயலாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் தாக்கல்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கொழும்பில் பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது

கொழும்பு - ஹோமாகமவில் பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய வகுப்பாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் பனாகொட,...

U20 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை நடத்தும் உரிமையை இந்தோனேஷியா இழந்தது

20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை இந்தோனேஷியாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலும் இப்போட்டிகளில் பங்குபற்றுவது இந்தோனேஷியாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மே 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

திறைசேரி செயலாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் தாக்கல்...

ஆங்கில மொழி மூலமான தொடர்பாடலை அதிகரிக்கும் செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்

அகில இலங்கை ரீதியாக ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் நோக்கில், முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அனைவரும் இந்துவாக திரட்சிபெற வேண்டும்!

வெடுக்குநாறி மலையிலுள்ள சிவனாலய விவகாரத்தைத் தொடர்ந்து பல பக்கங்களிலும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.இவ்வாறான கண்டனங்கள் வழமையானவை.இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது, கண்டனங்களை முன்வைப்பதும் - பின்னர் சில நாட்கள் - வாரங்களுக்கு...