27.6 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாகிஸ்தானை சேர்ந்த 183 பேரது விசாக்கள் ரத்து!!

பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் பள்ளி ஆசிரியரான சாமுவேல் பதி பாடம் நடத்தி கொண்டிருந்தபொழுது முகமது நபியின் கார்ட்டூன்களை காண்பித்த சர்ச்சையில் 18 வயது இளைஞர் ஒருவரால் கொடூர முறையில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  இதன்பின் பாரீஸ் நகரில் சார்போன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் லெஜன் டி ஹானர் என்ற பிரான்சின் உயரிய விருது பதிக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

பிரான்சில் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அந்நாட்டு அதிபர் மேக்ரான் இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு எதிராக போரிடுவேன் என உறுதி எடுத்து கொண்டார்.

எனினும், இஸ்லாமுடனும், முஸ்லிம்களுடனும் மேக்ரானுக்கு என்ன பிரச்னை? என்று துருக்கி மற்றும் பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 183 பேரது விசாக்களை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் நிராகரித்து உள்ளனர்.  அவர்களில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. என்ற உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது {ஜா பாஷாவின் சகோதரியின் பெயரும் இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து பிரான்சில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், 183 பேரும் உரிய ஆவணங்களுடன் இருந்தும் வலுகட்டாயத்தின்பேரில் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதன்பின்னர் பிரெஞ்சு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாஷாவின் சகோதரியை நாட்டில் அனுமதிக்கும்படி தூதரகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது.  அவரது மாமியாரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை காண்பதற்காக பாஷாவின் சகோதரி விருப்பம் தெரிவித்து உள்ளார்.  அதனால் அவரை தற்காலிகம் பிரான்சில் தங்க அனுமதி தரும்படி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு பாதிப்பு

நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று 15 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளாகும். அதனால் அவர்கள் தங்களின்...

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

புத்தசாசனம், தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகளே நல்லிணக்கத்துக்கு பாதிப்பு

நாட்டில் யுத்தம் நிறைவு பெற்று 15 வருடங்களாகியும் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் புத்தசாசன அமைச்சும் தொல்பொருள் திணைக்களமும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளாகும். அதனால் அவர்கள் தங்களின்...

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...