31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரான்ஸில் மீண்டும் முடக்க நிலை

நவம்பர் மாதம் முழுவதும் இரண்டாவது தேசிய முடக்கத்தை பிரான்ஸ்  ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். அதன் படி புதிய நடவடிக்கைகளின் கீழ், வெள்ளிக்கிழமை தொடங்கி, மக்கள் அத்தியாவசிய வேலை அல்லது மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றார். உணவகங்கள் மற்றும் பார்கள் போன்ற அத்தியாவசியமற்ற வணிகங்கள் மூடப்படும், ஆனால் பள்ளிகளும் தொழிற்சாலைகளும் திறந்திருக்கும். பிரான்சில் கொரோன வைரசினால் தினசரி இறப்புகள் ஏப்ரல் மாதத்திலிருந்து மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன. செவ்வாயன்று, 33,000 புதிய தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டன. ஜனாதிபதி மக்ரோன், “இரண்டாவது கொரோன அலைகளால் மோசமாக பாதிக்கப்படும்” என்று கூறினார், இது முன்னையதை விட கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை “. மார்ச் மாதத்தில் ஆரம்ப முடக்கியதைப் போல் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை நியாயப்படுத்த ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles