பிரான்ஸ் பிரதமர் மிச்செல் பார்னியருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பிரான்சில் கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது.
அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
இது ஜனாதிபதி இமானுவல் மெக்ரேனுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. மேலும் பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரேனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.