சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுடன் இணைந்து நடத்தப்படும் அரச எண்ணெய் பூசும் விழா, கண்டி தலதா மாளிகை சதுக்கத்திலுள்ள மஹா நாத தேவாலய வளாகத்தில் நாளை காலை 9.04 மணியிலிருந்து 10 மணிவரையான சுப நேரத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டு அரச எண்ணெய் பூசும் விழா மல்வத்த மற்றும் அஸ்கிரி உபய விஹார பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலைமையிலும், அரசின் தலைமையிலும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையிலும் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான எண்ணெய்தேய்க்கும் விழாவை சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் மற்றும் ஆயுர்வேதத்துறை இணைந்து ஏற்பாடு செய்யவுள்ளன.