புத்தளத்தில் 660 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன

0
124
புத்தளம், கரம்பே சந்தி வீதித்தடைக்கு அருகில் இலங்கை கடற்படையினரும், நுரைச்சோலை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது, ​​660 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நடவடிக்கையின் போது கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து கல்பிட்டியிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த லொறியொன்றை சோதனையிட்டதாகவும், வாகனத்திற்குள் கடத்தப்பட்ட 24 பீடி இலை பொதிகளை மீட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.குறித்த பொதிகளில் சுமார் 660 கிலோ 500 கிராம் பீடி இலைகள் இருந்துள்ளது.கைது செய்யப்பட்ட நபர் வத்தளை பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடையவர்.சந்தேக நபர், கடத்தப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.