30 C
Colombo
Sunday, September 24, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் எவராலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது: ரோஹித அபேகுணவர்தன

பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் எந்த தரப்பினராலும் வெற்றிபெற முடியாது என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘விவசாயத்துறை தொடர்பில் எடுத்த தவறான தீர்மானத்தினால் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் பலவீனமடைந்தது.
சேதன பசளை திட்டம் சிறந்தது. இருப்பினும் ஒரே கட்டத்தில் இரசாயன உரப் பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் சேதன பசளை திட்டம் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியது. சேதன பசளை திட்டம் தொடர்பில் தவறான ஆலோசனைகளை வழங்கிய துறைசார் நிபுணர்கள் இன்று ஒன்றும் அறியாதவர்களை போல் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுகிறார்கள். காலம் அவர்களுக்கு சிறந்த பாடத்தை கற்பிக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எமக்கும் அரசியல் கொள்கை ரீதியில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. நாடு வங்குரோத்து நிலை அடைந்த பின்னணியில் அரசாங்கத்தை பொறுப்பேற்க அவர் மாத்திரமே தற்துணிவுடன் முன்னிலையானார். பாரிய போராட்டத்துக்கு பின்னர் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒரு தரப்பினர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். கடந்த ஆண்டு இந்த காலப்பகுதியில் எம்மால் வீதிக்கு இறங்க முடியாத நிலை காணப்பட்டது. காட்டு சட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இல்லாதொழித்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தினார். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்குவார்கள். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன வெகுவிரையில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்கும். பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் எவராலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது’ என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Related Articles

ரோவரின் சக்கரத்தில் இருந்த தேசிய சின்னம் நிலவில் பதியாததற்கான காரணம் என்ன? – இஸ்ரோ தலைவர் விளக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி எல்.வி.எம்.3 எம்4 ரொக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம்...

பள்ளி மைதானங்களில் குழந்தைகளுக்கு போர் பயிற்சி: ரஷியாவிற்கு வலுக்கும் கண்டனம்

கடந்த பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களுக்கும்...

சுற்றுச்சூழலை காப்பதில் இலக்கை மாற்றும் இங்கிலாந்து: பிரதமர் சுனக்கை பாராட்டும் டிரம்ப்

உலகெங்கிலும் வாகனங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேறும் கரியமிலம் உட்பட பல நச்சு வாயுக்களினால் காற்றின் நச்சுத்தன்மை கூடி வருவதாகவும், இதனால் புவி வெப்பமடைவது அதிகரிப்பதுடன் வானிலையின் பருவகால நிகழ்வுகள் சீரற்று போவதாகவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ரோவரின் சக்கரத்தில் இருந்த தேசிய சின்னம் நிலவில் பதியாததற்கான காரணம் என்ன? – இஸ்ரோ தலைவர் விளக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி எல்.வி.எம்.3 எம்4 ரொக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம்...

பள்ளி மைதானங்களில் குழந்தைகளுக்கு போர் பயிற்சி: ரஷியாவிற்கு வலுக்கும் கண்டனம்

கடந்த பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களுக்கும்...

சுற்றுச்சூழலை காப்பதில் இலக்கை மாற்றும் இங்கிலாந்து: பிரதமர் சுனக்கை பாராட்டும் டிரம்ப்

உலகெங்கிலும் வாகனங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேறும் கரியமிலம் உட்பட பல நச்சு வாயுக்களினால் காற்றின் நச்சுத்தன்மை கூடி வருவதாகவும், இதனால் புவி வெப்பமடைவது அதிகரிப்பதுடன் வானிலையின் பருவகால நிகழ்வுகள் சீரற்று போவதாகவும்...

இந்திய முட்டை மூலம் “நிபா” வைரஸ் இலங்கைக்கு?

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை உள்ளிட்ட உணவுகள் மூலம் “நிபா” வைரஸ் இலங்கைக்கு வரக்கூடிய அபாயம் உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர்...

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது.  இந்த பகுதி அருகே 3 பேர் சந்தேகத்திற்கிடமாக நுழைந்துள்ளனர்.