பொன்சேகா சேறுபூசும் விடயத்தை மேற்கொள்கிறார் – பழனி திகாம்பரம்

0
66

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றி பெறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மாநாடொன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிப்பதித்தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் வெற்றி பெறுவார். அதனை கண்டும் அஞ்சும் தரப்பினராக உள்ள சரத் பொன்சேகா போன்றோரே இப்போது ஜனாதிபதியுடன் இணைந்து அவர் மீது சேறு பூச எண்ணுகின்றனர். சரத் பொன்சேகா என்பவர் அவர் இருக்கும் கட்சியை சார்ந்தவர்களையே திட்டியுள்ளார். அவரிடம் இராணவ சிந்தனையே உள்ளது. ஆகவே அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தப்போவதில்லை.