இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்தின தலைமையில், யாழில் இன்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இன்று காலை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில், பொலிஸார் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்தின, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.