32 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு

போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்களுக்கு நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது


மேற்படி நிகழ்வானது போக்குவரத்து அதிகாரசபையில் ஏற்கனவே தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் சேவையாற்றிய முகாமைத்துவ உதவியாளர் மற்றும் நேரம் கணிப்போர் ஆகியோருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி p.s.m சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், போக்குவரத்து அதிகாரசபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வடமாகாண ஆளுநர் அவர்கள் உரையாற்றுகையில் மிக முக்கியமான பல சிரமத்துக்கும் சிக்கல்களுக்கும் மத்தியிலேதான் நான் இந்த நியமனத்தை வழங்க அனுமதித்திருந்தேன். தனியார் போக்குவரத்து துறையினர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கபடுகின்றன. இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் போக்குவரத்து சபையினருக்குமிடையே காணப்படும் முரண்பாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது. இந்த இரு துறையினருக்குமிடையே காணப்படும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒருங்கிணைந்த சேவையை வழங்கவேண்டுமெனவும் அந்நேர அட்டவணையின்படி சேவைகள் நடத்தப்படுகிறதா உறுதிப்படுத்துமாறும் கேட்டுகொண்டார். இவை சம்பந்தமாக ஏதாவது பிரச்சினை ஏற்படுமாயின் அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் தலைவரும் அவர்சார்ந்த உத்தியோகத்தருமே. அத்துடன் தமது கடமைகளை நேர்மையுடன் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.  

Related Articles

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஒரு இலட்சம் அமெரிக்க டொலரில் வர்த்தககட்டடத்தை அமைக்கிறது நிந்தவூர் பிரதேச சபை

நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையினால், பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியினைக் கொண்டு நிந்தவூர் பிரதேச சபைக்கு சொந்தமான...

தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு கடிதம்

தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக  விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஒரு இலட்சம் அமெரிக்க டொலரில் வர்த்தககட்டடத்தை அமைக்கிறது நிந்தவூர் பிரதேச சபை

நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையினால், பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியினைக் கொண்டு நிந்தவூர் பிரதேச சபைக்கு சொந்தமான...

தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவுக்கு கடிதம்

தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக  விலகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த...

பொன்னியின் செல்வன் முதல் பாகமே நான் இன்னும் பார்க்கவில்லை – பார்த்திபன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால்...

விபசார விடுதி சுற்றிவளைப்பு இருவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...