போராட்ட களத்தில் சட்டப்படி வேலையில் குதிக்கும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்!

0
101

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று (15) இரண்டு மணித்தியால சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா தெரிவிக்கையில்இ இன்று (15) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இந்த தொழில்சார் நடவடிக்கை காரணமாக இலங்கையிலிருந்து புறப்படும் மற்றும் இலங்கைக்கு வரும் விமானங்கள் தாமதமாகலாம் என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்இ இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது இலங்கை வான்பரப்புக்கு மேலே பறக்கும் விமானங்கள்இ அவசர தேவைகள் கொண்ட விமானங்கள்இ மருத்துவ உதவி மற்றும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விமானங்களுக்கு எந்த இடையூறுகளையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.