போலியான கியூ.ஆர் குறியீடு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

0
392

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் கியூ.ஆர் குறியீட்டை மற்றையவர்களுக்குத் தெரியும்படியான இடத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ‘தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் கியூ.ஆர் குறியீட்டையை வேறு யாரும் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட கியூ.ஆர் முறையில் பிரச்சினைகள் காணப்படுமாக இருந்தால், மீள பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் பெறுவதற்காக போலியான கியூ.ஆர் குறியீட்டைப் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், போலி கியூ.ஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற முயற்சித்தவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அத்தகைய கியூ.ஆர் குறியீடுகளை அடையாளம் காண, தகவல் தொழில்நுட்ப முகவரகத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

0000000000000