மக்கள் ஆணை இல்லாத அரசுடன் வேலுகுமார் இணையமாட்டார் – இராதாகிருஷ்ணன்

0
205

வேலுகுமார் எங்களில் ஒருவர், கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவரிடம், ஊடகவியலாளர்கள் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது கூட்டணியின் முடிவுக்கு மாறாக வேலுகுமார் செயற்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்; இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயலாற்றும் குளோபல் கலை கல்லூரியின் பட்டமளிப்பு விழா நுவரெலியாவில் நடைபெற்றது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 210 பேர் இந்த பட்டமளிப்பு விழாவில் தங்களுடைய பட்டங்களை பெற்றுக் கொண்டனர். கல்லூரியின் பணிப்பாளர் செல்லதுரை பிரதீஸ் குமார் தலைமை நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அத்துடன் இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நாகர்கோவில் மாவட்டங்களில் இருந்து வருகை தந்த நடனத்துறை கலைஞர்களும், ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.