24 C
Colombo
Friday, September 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் நாளைமுதல் ஒருவார காலத்துக்கு சிகை அலங்கார நிலையங்களுக்கு பூட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகள் இடைநிறுத்தம், சிகை அலங்கார நிலையங்களுக்கு பூட்டு வர்த்தக நிலையங்களில் அனைத்துவிதமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் இந்த தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டுபிடிக்கப்பட்டதுடன் இரண்டாங்கட்ட தொடர்பாளர்கள் 500 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது இதற்கமைய உடன் அமுலுக்கு வரும்வகையில் தொற்று பரவாமலிருக்க இறுக்கமான தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தொற்று அபாயம் நிலவும் பிரதேசங்களில் அரச திணைக்களங்களில் 15 தொடக்கம் 20 வரையான உத்தியோகத்தர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படவுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளைப் பேணி செயற்பட அனுமதிக்கபட்டுள்ளது.
நாளை முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகளை இடைநிறுத்தவும் மிக அவசியமாக நடாத்தப்படவிருப்பின் மதகுரு உட்பட ஐவர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர் எனவும் சிகை அலங்கார நிலையங்கள் உடன் செயற்படும் வண்ணம் மூடப்படவேண்டும் எனவும் ஏற்கனவே தீர்மனிக்கப்பட்ட திருமண நிகழ்வுகளுக்கு அப்பகுதி சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகமைவாக செயற்படுவதுடன், மரணங்கள் ஏற்படின் 15 பேர் மாத்திரம் நல்லடக்க நிகழ்வில் கலந்து கொள்ளமுடியும்.
இதுதவிர நகர்ப்புறங்களான மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேசங்களில் சனநடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தவும் வர்த்தக நிலையங்களில் அனைத்து விதமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் சந்தைகளை திறந்த மைதானங்களில் நடாத்துவதுடன், உணவகங்களில் உட்காந்து உண்பதற்கு 50 வீதம அனுமதிக்கப்படுவர் எனவும் பொதுப் போக்குவரத்தில் ஆசனங்களுக்கு அளவான பயணிகளையே ஏற்றப்படல் வேண்டும். இவற்றுக்கு மேலதிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மக்கள் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் நடமாடும் காவல் பிரிவு செயற்படுவதுடன் பொதுமக்கள் இருவருடன் அரச உத்தியோகத்தர்கள் மூவரும் இணைப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விசேட பணிகள் அங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கமைய நாளை முதல் ஒரு வாரகாலத்துக்கு இந்த நடைமுறை இருக்கும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

புத்தளத்தில் ஒரு வாரத்தில் 4098 கிலோ பீடி இலைகள் மீட்பு – நால்வர் கைது

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 4098 கிலோ 500 கிராம்...

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

புத்தளத்தில் ஒரு வாரத்தில் 4098 கிலோ பீடி இலைகள் மீட்பு – நால்வர் கைது

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 4098 கிலோ 500 கிராம்...

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் நடப்பட்டது

மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் பயன்தரும் பழமரக்கன்றுகள் ஆலைய அறங்காவல் சபை மற்றும் பொதுமக்களால் நடப்பட்டது.ஆலய வளாகத்தில் நூறு தென்னக்கன்றுகள் ஏனைய பயன்தரும் பழமரக்கன்றுகள் நடும்...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது- ஞா.ஸ்ரீநேசன்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அச்சுறுத்தலை எதிர்நோக்கியதால் தனது பதவியை விட்டு விலகியுள்ளமை நாட்டின் மனித உரிமை, நீதித்துறை, மொத்தத்தில் ஜனநாயக ஆட்சிமுறையை பாதிக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் கிராம மக்கள் அச்சத்தின்

அம்பாறை கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தின் மேற்கு புறத்தில் உள்ள வயல் வெளிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறன.கிராமத்தில் உள்ள சுவர்களையும், பயன்தரு மரங்களையும் நாளாந்தம் சேதப்படுத்திக்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தினம் இன்று

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது கல்லூரி தின நிகழ்வு கோலாகலமாக இன்று கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பட்டில் கல்லூரியின் அதிபர் அன்ரனி பெனடிக் ஜோசப் தலைமையில்...