மட்டக்களப்பில் அத்தியாவசிய பொருட்கொள்வனவில் ஈடுபடும் மக்கள்(PHOTOS)

0
627

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர நடமாட்ட கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதை அடுத்து மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.


இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் அத்தியாவசிய பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வியாபாரிகள் வீதியோர வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதால் மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர்.
இங்கு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொருட்களை கொள்வனவு செய்தனர்.
நடமாட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் சகல பொருளாதார மத்திய நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு சகல பொருளாதார மத்திய நிலையங்களையும், பேலியகொடை மெனிங் சந்தை ஆகியனவற்றை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அவற்றை மீண்டும் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் போது தேவையான மரக்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்லும் பாரவூர்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களை பிரதேச செயலங்கள், ஆளுநர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
சகல மொத்த, சில்லறை வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் குறித்த அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.