மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு செயற்பாட்டில், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு சபை ஈடுபட்டுள்ளது

0
209

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு சபை, பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து ‘போதைப்பொருள் அற்ற சமூகம்’ எனும் தொனிப்பொருளில்,
மாவட்டம் மற்றும் பிரதேச செயலக ரீதியில் சமூகம் சார் பாதுகாப்பு முறைமை தொடர்பாக பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை
முன்னெடுத்து வருகின்றது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு சபை, மட்டக்களப்பு மாவட்டத்தில், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தல் தொடர்பாக
தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் செய்ற்பாடுகளில் ஈடுபட்டது.
மாவட்ட செயலக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு பிரிவின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாக பகுதியை புகைத்தல் பாவனை அற்ற
பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான பதாகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
போதைப் பொருள் ஒழிப்புத் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு நிகழ்வில், மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன்,
மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் புவனேந்திரன், பாதுகாப்புத் தரப்பினர், பல்கலைக்கழக மாணவர்கள், மாவட்ட செயலக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.