மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகையின் ஆலோசனையின் கீழ் மறை மாவட்ட கூட்டொருங்கியக்க திரு அவையின் செயல்பாட்டு இணைப்பாளர் அருட்பணி டி .எ.ஜூலியன் தலைமையில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் கூட்டொருங்கியக்க விழிப்புணர்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுடன் மறை கல்வி ஆசிரியர்கள், மறைக்கல்வி மாணவர்களின் பெற்றோர் சங்கம் இணைந்து பங்குத்தந்தை எலக்ஸ் ரொபட் அடிகளாரின் தலைமையில் கூட்டொருங்கியக்க திரு அவையின் செயல்பாட்டு இணைப்பாளர் அருட்பணி டி.எ.ஜூலியன் அடிகளாரினால் கூட்டொருங்கியக்க கண்காட்சி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .
கண்காட்சி நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட மக்கள் , மறைக்கல்வி மாணவர்கள் ,மறை ஆசிரியர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.தேசிய ஆயர்களின் மாமன்றத்தின் ஆலோசனை மற்றும் பணிப்புரையின் கீழ் கூட்டொருங்கியக்க ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் தேசிய ரீதியில் கூட்டொருங்கியக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது