மட்டக்களப்பு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் அலுவலகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலுக்குள்ளே பள்ளி வாயல் அலுவலகம் அமைந்துள்ளதுடன் நள்ளிரவு 12.50 மணியளவில் குறித்த அலுவலகம் உடைக்கப்பட்டு அலுவலகத்துக்குள் இருந்த 1,93,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக பள்ளி வாயல் நிருவாகம் காத்தான்குடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வை.விஜயராஜன் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.