மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு திராய்மடு மூன்றாம் குறுக்கு வீதி புனரமைக்கப்பட்டு வீதிக்கான தார் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மாநகர சபை உறுப்பினர் ஐ.சிறிதரன் ஆகியோர் நேரில் சென்று புனரமைப்பு வேலைகளை பார்வையிட்டதுடன் தார் இடும் பணியினை ஆரம்பித்து வைத்தனர்.
மட்டக்களப்பு திராய்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட திராய்மடு மூன்றாம் குறுக்கு வீதிப்பகுதியில் வசிக்கும் மக்கள், பாடசாலை மாணவர்கள் மழை காலங்களில் பயணிக்க செய்ய முடியாத நிலையில் உள்ள இவ் வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு மாநகர சபையின் உறுப்பினர் ஐ .சிறிதரனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மாநகர சபையின் 2021ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட பாதீட்டு நிதியின் மூலம் வீதி செப்பனிடப்பட்டு வீதிக்கான தார் இடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.