27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.மாநகர சபையில் தேசிய வாசிப்பு
மாதத்தின் இறுதி நிகழ்வு

மட்டக்களப்பு மாநகரசபையில் நீண்டகாலமாக நிலவிவரும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண அனைவரும் இணைந்து நடவடிக்கையெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நிகழ்வு இன்று மட்;டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாநகரசபையின் ஆணையாளர் நா.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையில் தேசிய வாசிப்பு மாதம் மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுவந்தது. இதனடிப்படையில் மாணவர்கள் மத்தியிலும் வாசகர் மத்தியிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் போட்டிகளும் நடாத்தப்பட்டன.

இதன்கீழ் இறுதி நிகழ்வு இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் முன்னிலை வகிக்க நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மட்டக்களப்பு வலய கல்விபணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் நூலக மற்றும் மக்கள் மேம்பாட்டு குழு உறுப்பினருமான எஸ்.கமலரூபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நூலக வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் சிறந்த நிகழ்வுகள் மேடைகளில் அலங்கரிக்கப்பட்டன.
அத்துடன் கல்லடி கலார்ப்பணா நாட்டிய நிலையத்தின் கலாவித்தகர் திருமதி சசிகலாராணி ஜெயராமின் மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இதன்போது பரவசமூட்டியது.

Related Articles

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்றுவழங்கினார்.பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் கையளிப்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் கல்லூரியின் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ் இன்று கையளிக்கப்பட்டது.150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் கல்லூரியின்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்றுவழங்கினார்.பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் கையளிப்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் கல்லூரியின் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ் இன்று கையளிக்கப்பட்டது.150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் கல்லூரியின்...

மட்டக்களப்பில் ‘புதியதொரு வீடு’ நாடக இறுவெட்டு வெளியீட்டு விழா

'புதிய தொரு வீடு' நாடக இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடக அரங்க ஆசிரியர் கழக அனுசரணையுடன், 'புதிய தொரு வீடு' நாடக...

பஸ்யால பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஸ்யால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நான்கு நாட்கள் தொடர்ச்சியான விடுமுறையால் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களின்...