28.5 C
Colombo
Thursday, April 25, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மன விரக்தியில் 23 வயது இளைஞன் தற்கொலை!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலம் இன்று (23) காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜனதா மாவத்தை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய. ஜி.ஆர்.சமன்குமார என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ள நிலையில் சடலமாக மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டு முற்றத்திலுள்ள கொங்கிரீட் தூண் ஒன்றில் கயிற்றினை கட்டி தற்கொலை செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தான் திருமணம் முடிக்கவுக்க பெண் வேறொருவரை காதலித்து வருவதை அறிந்து மன விரக்தியில் இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் அதிகாலை 5.00 மணியளவில் கதவினை திறந்த போது வீட்டு முற்றத்தில் தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தற்கொலை செய்து கொண்டவரின் தந்தை பொலிஸாரிடம் வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles