27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மல்வத்துஹிரிபிட்டியவில் தேரர் சுட்டுக்கொலை 

மல்வத்துஹிரிபிட்டிய கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரரை சுட்டுக்கொன்று அவரிடமிருந்து கொள்ளையிட்டுச் சென்ற நீல மாணிக்கக் கல் போலியானது என பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தேரரிடம் இருந்த நீல மாணிக்கக் கல்லை கொள்ளையிடுவதற்காகவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேரரை கொன்ற கும்பலால் கொள்ளையிட்டுச் செல்லப்பட்ட நீல மாணிக்கக் கல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அந்த நீல மாணிக்கக் கல் போலியானது என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

துபாயில் வசிக்கும் அத்துருகிரிய லெடா மற்றும் பத்தரமுல்லை பன்ட்டி  ஆகியோரின் தலைமையில் 4 சந்தேக நபர்கள் கொண்ட கும்பலினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கடந்த 11 ஆம் திகதி அன்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles